தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது: தோழிக்கு ‘லொக்கேஷன்’ அனுப்பி சிக்க வைத்தார்

Advertisement

கோவை: கோவையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், எம்எஸ்சி பட்டதாரி. இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் வேலையைவிட்டு நின்றுவிட்டார். அந்த நிறுவனத்தினர் அவர் வேலைக்கு சேரும்போது கல்வி சான்றிதழை வாங்கி வைத்துள்ளனர். வேலையை விட்டு நின்ற பின்பு அந்த சான்றிதழை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர் கோவை கல்லூரியில் படிக்கும்போது தனக்கு வகுப்பு எடுத்த கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசத்தை (45) அணுகி, சான்றிதழை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சிவப்பிரகாசம், சான்றிதழை வாங்கி வைத்துள்ளதாகவும், வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி கோவைக்கு வரவழைத்தார். இதனை நம்பி அந்த இளம்பெண் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் மட்டுமே இருந்துள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது பிடியில் இருந்து தப்பி இளம்பெண் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

பின்னர் செல்போனில் தோழி ஒருவரை தொடர்புகொண்டு, ‘லொக்கேஷன்’ அனுப்பினார். அவரது தோழி துரிதமாக செயல்பட்டு அதனை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விவரம் தெரிவித்தார். இதையடுத்து வடவள்ளி போலீசார் ‘லொக்கேஷன்’ உதவியுடன் மாணவி இருக்கும் வீட்டுக்கு சென்று குளியலறையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். கல்லூரி பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement