இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது: தோழிக்கு ‘லொக்கேஷன்’ அனுப்பி சிக்க வைத்தார்
இதையடுத்து அவர் கோவை கல்லூரியில் படிக்கும்போது தனக்கு வகுப்பு எடுத்த கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசத்தை (45) அணுகி, சான்றிதழை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சிவப்பிரகாசம், சான்றிதழை வாங்கி வைத்துள்ளதாகவும், வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி கோவைக்கு வரவழைத்தார். இதனை நம்பி அந்த இளம்பெண் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் மட்டுமே இருந்துள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது பிடியில் இருந்து தப்பி இளம்பெண் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.
பின்னர் செல்போனில் தோழி ஒருவரை தொடர்புகொண்டு, ‘லொக்கேஷன்’ அனுப்பினார். அவரது தோழி துரிதமாக செயல்பட்டு அதனை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விவரம் தெரிவித்தார். இதையடுத்து வடவள்ளி போலீசார் ‘லொக்கேஷன்’ உதவியுடன் மாணவி இருக்கும் வீட்டுக்கு சென்று குளியலறையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். கல்லூரி பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.