தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் சார்ஜரை திருடியதாக கூறி தனி அறையில் அடைத்து மாணவன் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

தர்மபுரி: தர்மபுரியில், கல்லூரி மாணவனை தனி அறையில் அடைத்து தாக்குதல் நடத்தி அதை செல்போனில் வீடியோ பதிவு செய்த, 17 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாமது மலை பகுதியை சேர்ந்தவர் 22வயதுடைய மாணவன் தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள அம்பேத்கர் மாணவர் அரசு விடுதியில் தங்கி, அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கணக்கியல் 3 ம்ஆண்டு படித்து வருகிறார். இவர் மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கல்லூரி முடித்து மாலை வேலையில், அப்பகுதியில் உள்ள பேக்கரியில் பகுதி நேர ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, இவர் தங்கியிருந்த அறையில் இருந்த சக மாணவர் ஒருவர், தனது செல்போனின் சார்ஜரை 22வயதுடைய கல்லூரி மாணவன் திருடிவிட்டதாக, தனது சக நண்பர்களிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து திருட்டு புகார் கூறிய மாணவனுக்கு ஆதரவாக விடுதியில் இருந்த 19 மாணவர்கள் சேர்ந்து, 22வயதுடைய மாணவனை தனி அறையில் அடைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

Advertisement

மேலும், அவரை துன்புறுத்துவதை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அறையில் இருந்த கல்லூரி மாணவன் ஒரு வழியாக, மாணவர்களின் பிடியில் இருந்து அங்கிருந்து தப்பி, அதியமான் கோட்டை காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு, விடுதியில், தனி அறையில் அடைத்து தன்னை சித்ரவதை செய்ததாக புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதியில் தங்கியிருந்த 17 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வன்கெடுமை வழக்கு தொடர்பான கைது விவகாரம் என்பதால், மேற்கொண்டு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க விடுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News