தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்பூர் நகராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; சக பணியாளர்கள் போராட்டம்: போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு

Advertisement

ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சியில் இன்று தூய்மை பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து சக பணியாளர்கள் பணியை புறக்கணித்து போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர். சில வார்டுகளில் தனியாரும், சில வார்டுகளில் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஆம்பூர் பஜார் நாகநாத சுவாமி கோயில் தெருவில் உள்ள மீன்கடை அருகே இன்று காலை தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டனர். அங்கு வைத்திருந்த குப்பை டப்பாக்களை பணியாளர் சம்பத், மற்றொரு பெண் பணியாளர் அகற்றியதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள் சிலர் அது எங்கள் கடை குப்பை டப்பா. அதை எதற்காக தூக்கிப்போடுகிறாய்’ எனக்கூறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் சம்பத்தை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சம்பத், பணி மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார். இதையறிந்த சக பணியாளர்கள் சுமார் 30 பேர், பணிகளை புறக்கணித்துவிட்டு ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அங்கு சம்பத்தை தாக்கிய 4 பேரை கைது செய்யக்கோரி போலீசாரிடம் கூறினர். தொடர்ந்து போலீசார், சம்பத்தை தாக்கியவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்ததால் சில வார்டுகளில் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் காரணமாக இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement