தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் 29% உயர்வு: மணிப்பூரில் உச்சக்கட்ட அவலம்

புதுடெல்லி: மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் 29% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக, ‘பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989’ நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் 2015ல் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்தச் சட்டங்களை மாநிலங்களில் திறம்படச் செயல்படுத்த ஒன்றிய அரசு நிதியுதவி அளிப்பதுடன், பழங்குடியின மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறது.

Advertisement

இருந்தபோதிலும், இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள், அமைப்பு ரீதியான சிக்கல்கள் மற்றும் குறைந்த தண்டனை விகிதங்கள் காரணமாக, பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) 2024ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டை விட 29% அதிகரித்துள்ளது. குறிப்பாக, மணிப்பூர் மாநிலத்தில் தான் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடியினரான குக்கி-சோமி சமூகத்தினருக்கும் இடையே கடுமையான இனக்கலவரம் நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தின்போது நிகழ்ந்த கொலை, பாலியல் வன்கொடுமை, தாக்குதல் போன்ற கொடூர சம்பவங்களே, அம்மாநிலத்தில் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

Advertisement

Related News