தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பாஜ பிரமுகர் கைது

Advertisement

திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்ரீநகர் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 20ம் தேதி இரவு அந்த மையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை ஹாலோ பிளாக் கல்லால் உடைக்க முயன்றார். நீண்ட நேரம் போராடியும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் பணம் எடுக்க சென்ற நபர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பதும், இவர் பாஜ திருப்பூர் மாவட்ட பிரசார அணி செயலாளர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக முரண்பட்ட தேதியுடன் திருப்பூர் மாவட்ட பாஜ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன், முருகானந்தம் இருக்கும் படம் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News