தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.23.21 லட்சம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும், பயிற்சி பெறுவதற்காகவும் ரூ.23.21 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியில் இருந்து பதக்கங்கள் வென்ற பாரா தடகள வீராங்கனைகள் முத்துமீனா வெள்ளைசாமி, நா.சங்கர் சத்யா, பாரா தடகள வீரர் க.கஐன் கவுதம் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் அக்டோபர் 8 முதல் 15 வரை நடைபெற உள்ள 2025 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தலா 2,61,800 ரூபாய்க்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

Advertisement

மேலும் பாரா பேட்மிண்டன் வீரர் தினகரன் பாண்டுரங்கன், விரைவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொள்ள 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், தங்கப்பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் பக்ரைன் நாட்டில் நடைபெறும் 2025 ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும் 1.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும்,

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோபிகா விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் மற்றும் வில்வித்தை வீராங்கனை கே.எஸ்.வெனிசா ஸ்ரீ விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு 4,10,740 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்பட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Advertisement