தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ திடீர் ரத்து: நெல்லை பல்கலை. பதிவாளர் அறிவிப்பு

நெல்லை: நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர பிஎஸ்சி படிப்புடன் நெட் (தேசிய தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நாட்டின் எந்த கல்லூரி, பல்கலைக்கழகத்திலும், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாநிலத்தின் எந்த கல்லூரி, பல்கலைக்கழகத்திலும் உதவிப் பேராசிரியராக பணி புரியலாம். இந்த தேர்வு 43 பாடப்பிரிவுகளில் சிபிடி எனப்படும் கணினி வழியில் நடத்தப்படுகிறது.
Advertisement

தமிழ்நாட்டில் இந்த தேர்வை நெல்லை மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்காக கடந்த ஏப். 1 முதல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பம் பெறப்பட்டன. விண்ணப்பிக்க மே 15 தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வு எழுத சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து செட் தேர்வு நாளை(ஜூன்7) மற்றும் ஜூன் 8ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் செட் தேர்வை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement