தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏழுகிணறு பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது: ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

Advertisement

தண்டையார்பேட்டை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை பூக்கடை சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, போதை பாக்கு மற்றும் போதை பவுடர் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் ஏழுகிணறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அதில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் பிரேம்குமார் (32), பிராட்வே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ் (34), திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்த ராஜன் (36) என தெரியவந்தது. பிரேம்குமாரின் நண்பர் மலேசியாவில் உள்ளார். அவர் கூறியபடி உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்து, பதுக்கி வைத்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இவர்களது கூட்டாளிகளான அஸ்லாம், அகஸ்டின் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப் பொருள் வழக்கில் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக கைதாகி வரும் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News