தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அவசர கதியில் எஸ்ஐஆர் ஏற்புடையதல்ல: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நவம்பர் புரட்சி தின பேரணி- பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி(எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதனை நாங்கள் ஏற்கவில்லை. ஆரம்பத்திலேயே எஸ்ஐஆர் தோல்வி அடைந்து விட்டது.

Advertisement

தமிழக முதலமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவசர கதியில் எஸ்ஐஆர் புகுத்தும் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழக முதல்வர் தலைமையிலான எங்களது கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. கூட்டணி மட்டுமல்ல, தமிழக மக்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

தமிழக மக்களைப் பொறுத்தவரை, ஜாதி-மதங்களால் பிளவுபடுத்துகின்ற எந்த கருத்தையும் ஏற்க மாட்டார்கள். திமுக கூட்டணி நாட்டின் ஜனநாயகத்தை காக்கும் ஒற்றுமை கூட்டணி, அரசியல் சாசனத்தை பாதுகாக்கின்ற கூட்டணி. கொள்கை அளவில் உறுதியாக இருப்பது போல், தமிழக மக்களும் இருக்கின்றனர். அவர்கள் எப்பொழுதுமே நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள். எனவே, தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை பலமாக இருக்கிறது. ஆகவே, தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை தலைதூக்கியுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். கரூர் துவங்கி கோவை நிகழ்வு வரை தமிழக முதல்வர் உடனடியாக தலையீடு செய்கிறார். அதிகாரிகளை இயக்குகிறார். சட்டத்தின் முன் குற்றவாளிகளை கொண்டு வந்து நிறுத்தி, நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறார். தமிழக அரசு எப்பொழுதுமே நீதியின் பால், சட்டத்தின் பால் நிற்கிறது. எனவே, முதல்வரின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இவ்வாறு வீரபாண்டியன் தெரிவித்தார்.

Advertisement

Related News