தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டமன்ற தேர்தலில் சொத்துக்களை மறைத்ததாக எடப்பாடி மீதான வழக்கு நாளை விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, தேனியைச் சேர்ந்த இன்ஜினியர் மிலானி என்பவர், சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்துக்கள், வருமானங்கள் ஆகியவை குறித்த உண்மை தகவலை மறைத்து, பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவையும் பெற்றார். இதனால், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், இந்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதுடன், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியது. இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஏற்கனவே, ஈரோடு கல்லூரி, சேலம், இடைப்பாடி சார்பதிவாளர்கள், நாமக்கல், சென்னை பதிவாளர்கள், இடைப்பாடி கனரா வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை திரட்டி வைத்திருந்தனர்.

இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதித்ததுடன், சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கும், மனுதாரரான மிலானிக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதனால், 10 மாதத்திற்கு பிறகு, இந்த வழக்கு நாளை(18ம்தேதி) சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, தமிழக அரசும், மிலானியும் பதில் மனு தாக்கல் செய்கின்றனர். இதன் பிறகே விசாரணை தொடருமா? என்பது தெரியவரும்.

Advertisement

Related News