தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடி, கோடியாய் குவித்த அசாம் பெண் அதிகாரி கைது: ரூ.2 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கோடி, கோடியாக சொத்து குவித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் மாநில குடிமைப்பணி பெண் அதிகாரியான நுபுர் போரா, கடந்த 2019ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவர் பார்பெட்டா மாவட்டத்தின் வட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பதிவு செய்து, குடியேறிகளுக்கு பணத்திற்காக கைமாற்றியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உத்தரவின் பேரில், கடந்த ஆறு மாதங்களாக அவர் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.

Advertisement

தற்போது இவர் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோராய்மாரி பகுதியின் வட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சரின் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் கவுகாத்தியில் உள்ள நுபுர் போராவுக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பெண் அதிகாரி நுபுர் போரா கைது செய்யப்பட்டார்.

Advertisement

Related News