அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு
அசாம்: இன்று அசாம் உட்பட வடகிழக்கு இந்தியாவின் சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாம் மாநிலத்தில் இன்று , உடல்குரி உட்பட வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் மாலை 5:20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் உடல்குரியில் 5 கி.மீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து மற்றும் மணிப்பூர் போன்ற பிற வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்தனர். நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏதேனும் அதிர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மனதில் கொண்டு, கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.