தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் வாலிபர்: செவிலியரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

சிவகாசி: சிவகாசியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர், அவரது மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். இது தொடர்பான தகவலை மறைத்த செவிலியரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில் (33). இவரது மனைவி அஷ்மா காத்துன் (30). இவர்கள் இருவரும் சிவகாசி சாரதா நகரில் தங்கி, அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே 9, 7, 5 மற்றும் 3 வயதில் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அஷ்மா காத்துன் 5வது முறையாக கர்ப்பமானார். நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்மா காத்துனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து அப்துல் ஜலில் தானே பிரசவம் பார்த்துள்ளார்.

இதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், கங்காகுளம் கிராம சுகாதார செவிலியர் கிரேஸ், வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை மறைத்து, தாய் சேய் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பிரசவம் நடந்ததாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தாயும், சேயும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அப்துல் ஜலில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் நேரில் வந்து அவரிடம் விசாரித்தனர். இதில், ஏற்கனவே பிறந்த 4 குழந்தைகளுக்கும் அசாமில் இருந்தபோது வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததும், அந்த வகையில் 5வது குழந்தைக்கும் பிரசவம் பார்த்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை கண்டித்து எச்சரித்துள்ளனர். தொடர்ந்து நடந்த சம்பவத்தை மறைத்து தவறான தகவல் அறித்த கிராம சுகாதார செவிலியர் கிரேஸை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து சிவகாசி சுகாதார துணை இயக்குநர் ஜெகவீர பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Related News