தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாமல்லபுரத்தில் ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடக்கம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஏஎஸ்எப் 4வது ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆசிய அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசின் முழு ஒத்துழைப்புடன் மாமல்லபுரத்தில் நடத்தும், 4வது ஏஎஸ்எப் ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி இன்று காலை 6.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டி, இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை காலை 6.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்தியா மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவு, தென் கொரியா உள்ளிட்ட 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 102 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 4 இடங்கள் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்படும். இதற்கிடையே, ஏஎஸ்எப் 4வது ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் டெம்பிள் பே ரிசார்ட்டில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில், தென் ஆப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அலைச்சறுக்கு விளையாட்டின் விளம்பர தூதருமான ஜான்டி ரோட்ஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் கவின்மொழி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related News