தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய கோப்பை தொடர்; கில், பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி

 

Advertisement

பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பாகிஸ்தான், 19ம் தேதி ஓமன் அணியுடன் மோத உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி வரும் 4ம் தேதி துபாய் புறப்படுகிறது. இதனிடையே இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் உடற்தகுதி தேர்வு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்தது.

இதில் டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முகமது சிராஜ், ஜிதேஷ் சர்மா, பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் உள்ளிட்டோரும் தேர்ச்சி பெற்றனர். இதில் பிரசித் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். டி.20, டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற்ற 38 வயதான ரோகித்சர்மா கடந்த 3 மாதமாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ஆடவில்லை. அக்டோபர் மாதம் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் களம் இறங்க உள்ளார். அதற்கு முன் செப். 30, அக். 3, 5 ஆகிய தேதிகளில் கான்பூரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏஅணியில் களம் இறங்க ஆர்வமாக உள்ளார்.

 

Advertisement

Related News