தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசியக்கோப்பைக்கான போட்டி நடுவரை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

துபாய் : ஆசியக்கோப்பைக்கான போட்டி நடுவர் பைக்ராஃப்டை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. போட்டி நடுவர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் அவரை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement

கடந்த செப்டம்பர் 14 அன்று துபாயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் போது சர்ச்சைக்குரிய கைகுலுக்கல் சம்பவத்தைத் தொடர்ந்து, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி ஆண்டி பைக்ராஃப்டை நடுவர் குழுவிலிருந்து நீக்கக் கோரினார். கை குலுக்கல் சென்ற சம்பவத்தில் நடுவர் பைக்ராஃப்ட்டுக்கு எந்தப் பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி சட்டங்களை போட்டி நடுவர் மீறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. ஆசிய கோப்பையிலிருந்து போட்டி நடுவரை உடனடியாக நீக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், UAE-க்கு எதிரான போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நியாயப்படுத்த போதுமான காரணங்கள் இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

Advertisement