தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி!

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement

பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. நடப்பு ஆசிய கோப்பையில் தோல்வியே தழுவாத இந்திய அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் அபாரமாக கோலடிக்க இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து போட்டியின் 28வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரித், சஞ்சய் ஆகியோர் பந்தை கடத்தி கொடுக்க அதனை தில்பிரீத் சிங் அபாரமாக அடித்து கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தது. பின்னர் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங், தனது இரண்டாவது கோலை அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் கடைசி 15 நிமிடத்தில் கொரிய அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. இருந்தாலும் இந்திய அணி பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கொரிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி 50-வது நிமிடத்தில் 4வது கோல் அடித்தது. இதையடுத்து அடுத்த நிமிடத்தில் கொரிய அணி தங்களது முதல் கோலை அடித்தது.

ஆனால் அதன் பின் கொரிய அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வென்று 4வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

Advertisement