தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசியாவின் மிகச்சிறந்த கிராமப்புற சுற்றுலாத்தல பட்டியலில் மூணாறு: 7வது இடம் பிடித்து அசத்தல்

மூணாறு: ஆசியாவின் மிகச்சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மூணாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ‘கடவுளின் சொந்த நாடு’ என அழைப்பர். இங்கு இயற்கை அழகுக்கு பஞ்சமில்லை. மலைத்தொடர்கள், பசுமை மிகுந்த பள்ளத்தாக்குகள், சலசலக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், பாய்ந்து செல்லும் ஆறுகள் ஆகியவை மாநிலத்தை அழகூட்டும் ஆபரணங்களாக திகழ்கின்றன.

Advertisement

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு ‘தென்னகத்தின் காஷ்மீர்’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல தனியார் டிஜிட்டல் பயண தளம் ஒன்று தனது இணைய பக்கத்தில் ஆசியாவின் சிறந்த 8 கிராமப்புற சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுற்றுலாப்பயணிகளின் விருப்ப இடமான மூணாறு இடம் பிடித்துள்ளது. 2025 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சுற்றுலாப்பயணிகள் தேடிய 8 சுற்றுலா பகுதிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மூணாறு 7வது இடத்தை பிடித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடை வாசஸ்தலமாக இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பச்சைப் பசேல் தேயிலை தோட்டங்கள், மலை தழுவும் மேகக் கூட்டங்கள், சில்லென்று வீசும் காற்று, அவ்வப்போது மழை தெளித்து கோலமிடும் இயற்கை, நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், வியூ பாயிண்ட்கள், காய்கறித் தோட்டங்கள், புல்வெளி நிறைந்த காடுகள், இரவிகுளம் தேசிய பூங்காவில் உள்ள அபூர்வ இன வரையாடு, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் சாகச விளையாட்டுகள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள், தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனைமூடி ஆகியவை மூணாறில் அமைந்துள்ளது. மூணாறை தவிர கேமரூன் ஹைலேண்ட்ஸ் (மலேசியா), காவோ யாய் (தாய்லாந்து), புன்காக் (இந்தோனேசியா), புஜிகாவாகுச்சிகோ (ஜப்பான்), கென்டிங் (தைவான்), சாபா (வியட்நாம்), மற்றும் பியோங்சாங்-கன் (தென் கொரியா) ஆகியவை ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News