தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருப்புக்கோட்டை அருகே பலத்த காற்றுடன் கனமழை: பெரும்பாலான வாழை மரங்கள் குலை தள்ளி இருந்தன

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் சுமார் 1000ஏக்கருக்கு மேலாக வாழை மரங்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பெரும்பாலான வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில், அப்படியே சாய்ந்து அனைத்தும் நாசம் அடைந்தது. வாழை குலைகள் பிஞ்சாக இருப்பதால், இதனால் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த நிலையில், காற்றுடன் பெய்த கனமழையினால் மிகவும் நஷ்டம் அடைந்ததாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல் சூறாவளி காற்றின் காரணமாக வாழை மரம் சாய்ந்ததில் எந்தவித நிவாரணம் வழங்கவில்லை எனவும் ஏற்கனவே மிகுந்த நஷ்டத்தில் உள்ள தங்களுக்கு இந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முறையாவது அரசாங்கம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஒரு வருடம் நடைபெறும் விவசாயத்தில் அறுவடை வரும் பொழுது வாழை மரங்கள் சாய்ந்ததால் தங்கள் உழைப்பு வீணாகிவிடும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். இதேபோல் சிதம்பராபுரத்தில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News