தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருணாச்சலில் கோர விபத்து 1000 அடி பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 18 பேர் பலி

தின்சுகியா: அருணாச்சல பிரதேசத்தில் 1000 அடி பள்ளத்தாக்கில் டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் மாயமாகி உள்ளனர். அசாமின் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள், அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் ஹயுலியாங்கில் விடுதி கட்டுமான பணிக்காக கடந்த 8ம் தேதி டிப்பர் லாரியில் அழைத்து வரப்பட்டனர். அப்போது லாரி ஹயுலியாங்க்-சாக்லகாம் சாலையில் சாக்லகாமில் இருந்து 12 கிமீ தொலைவில் வந்த போது, சாலை வளைவில் வழுக்கி 1000 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

Advertisement

இந்த விபத்து குறித்து ஆரம்பத்தில் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. யாரும் போலீசில் புகாரும் தரவில்லை. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புத்தேஸ்வர் தீப் என்ற ஒரே ஒரு தொழிலாளி பள்ளத்தாக்கில் இருந்து மேலே ஏறி வந்து செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ராணுவம், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு மரங்கள் அடர்ந்த பகுதியில் டிப்பர் லாரி கிடப்பது கண்டறியப்பட்டது. 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

Advertisement

Related News