தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆறுமுகநேரியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2.04 டன் பீடி இலைகள் பறிமுதல்: கியூ பிரிவு போலீசார் அதிரடி

Advertisement

தூத்துக்குடி: ஆறுமுகநேரியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2.04 டன் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போலீஸ் சப்-டிவிசன், ஆறுமுகநேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக்கு வடபுறம் உள்ள கோட்டைமலை காட்டுப்பகுதி, கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு டிஎஸ்பி பொன்னம்பலத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், எஸ்ஐ ஜீவமணி தர்மராஜ், எஸ்எஸ்ஐ ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ஆறுமுகநேரி அருகே கொம்புத்துறை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது ஒரு லாரி கொம்புத்துறை கடற்கரை பகுதியில் வந்து நின்றது. அதிலிருந்த டிரைவர் உள்பட 4 பேர் லாரியிலிருந்த மூடைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை தூரத்தில் இருந்து பார்த்த கியூ பிரிவு போலீசார், அந்த லாரியை நோக்கி விரைந்து சென்றனர். இதைப் பார்த்த அவர்கள் 4 பேரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து லாரியில் இருந்த மூடைகளை கியூ பிரிவு போலீசார் சோதனையிட்ட போது, அவை பீடி இலை மூடைகள் என்பது தெரியவந்தது. தலா 30 கிலோ எடை கொண்ட 68 பீடி இலை பண்டல்கள் என மொத்தம் 2040 கிலோ பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். லாரி மற்றும் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் நாளை (திங்கள்) சுங்கத்துறையிடம் ஒப்படைக்கின்றனர்.ஆறுமுகநேரி அருகே கொம்புத்துறை கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement