தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அரும்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்

 

Advertisement

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை அரும்பாக்கத்தில் இன்று சென்னை மண்டலம் -2 இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்து சமய அறநிலையத்துறையில் 20 இணை ஆணையர் மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், நிர்வாக வசதிக்காக சென்னையிலுள்ள 2 மண்டலங்களை மூன்றாக பிரித்தும், திருவள்ளூர் மற்றும் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு 2 புதிய மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை-2 மற்றும் திருப்பத்தூரில் உதவி ஆணையர் அலுவலகங்களும், தலைமையிடத்தில் 8 உதவி ஆணையர் பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. சென்னை-1 மண்டல அலுவலகம் பாரிமுனையிலும், சென்னை-2 மண்டல அலுவலகம் அரும்பாக்கத்திலும், சென்னை-2 மண்டல அலுவலகம் மந்தைவெளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சென்னை அரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் சு.மோகனசுந்தரம், உதவி ஆணையர் கி.பாரதிராஜா, செயல் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News