தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனை அருகே விவசாயி நிலத்தில் 44 கிலோ ராட்சத மரவள்ளிக்கிழங்கு

*ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

Advertisement

அருமனை : அருமனை அருகே விவசாயி நிலத்தில் சுமார் 44 கிலோ எடையுள்ள ராட்சத மரவள்ளிக்கிழங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.அருமனை அருகே கடையாலுமூடு தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (55). விவசாயி.

இவர் விவசாய நிலத்தில் ரப்பர், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்திருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலி அமைத்து, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவரது நிலத்தில் சாகுபடி செய்திருந்த மரவள்ளிக்கிழங்குகளை தோண்டி எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது மண்ணுக்குள் இருந்து ராட்சத, அதிக எடையுள்ள மரவள்ளிக்கிழங்கு இருப்பதை கனகராஜ் பார்த்துள்ளார். அதனை எடுக்க முயன்றபோது அவரால் தனியாக மரவள்ளிக்கிழங்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து 3 பேர் சேர்ந்து சுமார் 44 கிலோ எடையுள்ள மரவள்ளிக்கிழங்கை வெளியில் எடுத்தனர்.

அதனுடைய விட்டம் 37 இன்ச் மற்றும் 4.5 சென்டி மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது. விவசாயி நிலத்தில் அதிக எடை கொண்ட மரவள்ளிக்கிழங்கு எடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கனகராஜ் வீட்டுக்கு சென்று அதிசய மரவள்ளிக்கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Advertisement

Related News