தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செயற்கை கருத்தரிப்பு மூலம் தாய்மை; இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மரணம்: நடிகையின் வாழ்வில் சோகமும் மகிழ்ச்சியும்

பெங்களூரு: செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த கன்னட நடிகை பாவனா, பிரசவத்தின்போது ஒரு குழந்தையை இழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகையான பாவனா ராமண்ணா (40), செயற்கை கருத்தரிப்பு மற்றும் விந்தணு தானம் மூலம் இரட்டைக் குழந்தைகளுடன் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கடந்த ஜூலை 4ம் தேதி அறிவித்திருந்தார். தனது 20 மற்றும் 30 வயதுகளில் தாய்மையின் மீது நாட்டம் இல்லாத தனக்கு, 40 வயதில் அந்த ஆசை ஏற்பட்டதாகவும், திருமணமாகாத பெண் என்ற நிலையில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தன்னை அலைக்கழித்ததாகவும் அவர் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

Advertisement

தனது தந்தை, சகோதரர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் ஆதரவுடன் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது குழந்தைகளுக்குத் தந்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்பு நிறைந்த வீட்டில் அவர்கள் வளர்வார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டதுடன், சமீபத்தில் தனது வளைகாப்புப் படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடிகை பாவனாவிற்குப் பிரசவம் நடந்துள்ளது. அதில் அவருக்கு இரட்டைக் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பிரசவத்தின்போது ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. கர்ப்பத்தின் மூன்றாவது காலகட்டத்தில் பாவனாவிற்குச் சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், பரிசோதனையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உடல்நலக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, எட்டாவது மாதத்திலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, தாயும், உயிர் பிழைத்த பெண் குழந்தையும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தையும், ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News