தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

Advertisement

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், 2177 பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

இதில் 676 மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கலைத்திருவிழாவை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.

அதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அப்போது, கோலாட்டம், கும்மியாட்டம், மயிலாட்டம், பறையிசை, தப்பாட்டம் குழு நடனம், பாடல், நாடகம் என பல்வேறு கலைத்திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் ஆகியவற்றை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

விழாவில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நாளை மற்றும் வரும் 1ம் தேதி நடக்கிறது.

Advertisement

Related News