தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது, சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க கோயில்களில் திருடிய 3 பேர் கைது: ரூ.22 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்

திருமலை: மது, சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடனை அடைக்க கோயில்களில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கல்யாணதுர்கம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோயில்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி தங்கம், வெள்ளி நகைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போனதாம். இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இந்நிலையில் டிஎஸ்பி ரவிபாபு தலைமையிலான சிறப்பு குழுவினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். அதன்படி நேற்று கோர்லப்பள்ளி கிராஸ் பகுதியில் சிறப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அனந்தபூரை சேர்ந்த மாரிசாமி(45), ராஜு(37), னிவாசலு(49) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், நண்பர்களான இவர்கள் 3பேரும் கோயில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் மது மற்றும் சூதாட்ட பழக்கங்களுக்கு அடிமையான இவர்கள், பலரிடம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை நீண்ட நாட்களாக இவர்கள் திருப்பி தரவில்லையாம். கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் கடனை அடைக்க திருட்டு முயற்சியில் ஈடுபடுவது என திட்டமிட்டுள்ளனர். அதன்படி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று கண்காணித்துள்ளனர்.

அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பூஜை ெபாருட்களை திருடியுள்ளனர். மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள சில வீடுகளிலும் நகை, பணத்தை திருடியுள்ளனர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் வெள்ளியால் ஆன பொருட்கள், 44 கிராம் தங்க நகைகள், 20 கிலோ பித்தளை மணிகள் மற்றும் 5 கிலோ செம்பு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் என தெரிகிறது. மேலும் எங்காவது திருடியுள்ளார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News