தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பை விமான நிலையத்தில் வேட்டை ரூ.22 கோடி தங்கம் போதைப்பொருள் கடத்தல்: இந்த மாதம் மட்டும் 6 பேர் கைது

 

Advertisement

மும்பை: நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம், கடத்தல் கும்பல்களின் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட பல்வேறு அதிரடி சோதனைகளில் சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், ‘ஆபரேஷன் வீட் அவுட்’ என்ற பெயரில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில், 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாங்காங்கில் இருந்து வந்த இரண்டு இந்தியர்கள் மற்றும் அதைப் பெறக் காத்திருந்த ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், செப்டம்பர் 21 முதல் 24ம் தேதி வரை நடந்த பல்வேறு சோதனைகளில், பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பையில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்த மேற்கண்ட கும்பலைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து எம்.டி.எம்.ஏ மற்றும் கோகைன் போன்ற போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News