ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அதனை விசாரித்த உயர்நீதிமன்றம்,\\” ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், தமிழ்நாடு காவல்துறை வசம் உள்ள விசாரணை ஆவணங்களை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கை விசாரித்து ஆறு மாதங்களில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.