தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: தொழில் வாத்தியார் எனக்கூறி போட்டோ எடுக்க வந்த வாலிபர்களால் பரபரப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பிரபல ரவுடி நாகேந்திரன் சிறையிலிருந்து கொண்டே இந்த கொலைக்கு திட்டமிட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
Advertisement

வேலூர் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்திற்கு கைது காட்டுவதற்காக போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அதன் பின்பு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் மனுத்தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாகேந்திரனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். ஏற்கனவே வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரனையும் போலீசார் விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் ரவுடி நாகேந்திரன் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது தனது தொழில் வாத்தியார் எனக் கூறி 2 வாலிபர்கள் நாகேந்திரனுடன் போட்டோ எடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News