தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவரது வீட்டிற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி மகேந்திரன், பொண்ணை பாலு உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர்.

Advertisement

2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் வாதிகளின் தொடர்பு உள்ளது. இதனால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த செப்டம்பர் 24ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரியும் . அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது.

 

Advertisement