ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செப்.25க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை செப்.25க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரிய ஆம்ஸ்ட்ராங் சகோதரரின் வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு ஒத்திவைத்த நிலையில், கீனோஸ் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி தெரிவித்தார். மேலும், தற்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடர்ந்த மனுவை விசாரிக்க முடியாது எனக் கூறி ஐகோர்ட் ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement