தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

32 பேருக்கு அர்ஜுனா விருது குகேஷ் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

Advertisement

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த செஸ் வீரர் டி.குகேஷ்,ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங்,பாரா ஒலிம்பிக் தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோருக்கு உயரிய மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது நேற்று வழங்கப்பட்டது. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு தியான்சந்த் கேல்ரத்னா விருது, துரோணாச்சாரியா விருது, அர்ஜூனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிறந்த வீரர்,வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவரும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற டி. குகேஷ், இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர் பிரவீன் குமார், பாரீஸ் ஒலிம்பிக்கின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற வீராங்கனை மனுபாக்கர் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது.

32 பேருக்கு அர்ஜுனா விருது: பாரீஸ் பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன்(காஞ்சிபுரம்), ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றிய நித்யஸ்ரீ சுமதி சிவன்(கரூர்), ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்திய மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்) ஆகிய தமிழக வீராங்கனைகள் உட்பட 32 பேருக்கு அர்ஜூனா விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார்.

அர்ஜூனா விருதை வென்றவர்களுக்கு ரூ.15 லட்சம் மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ,விளையாட்டு துறை செயலாளர் சுஜாதா சவுத்ரி கலந்து கொண்டனர். ஜனாதிபதியிடம் விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினர்.

Advertisement