அரியலூர் கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்: பிடிவாரன்ட் ரத்து
Advertisement
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகும்படி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேரில் ஆஜராகி ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தேன். அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி அடுத்தடுத்த வாய்தாக்களில் பங்கேற்க நீதிபதி ஆணையிட்டு இருக்கிறார். இதுபோன்ற வழக்குகளை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது உடனடியாக தமிழக அரசு அவர் தங்கி இருக்கிற இல்லத்திற்கு பாதுகாப்பு அளித்து இருப்பதை வரவேற்கிறோம் என்றார்.
Advertisement