தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் அருகே பரபரப்பு.. விபத்தில் சிக்கிய லாரி: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் நடந்துள்ளது. இந்த லாரியில் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் இன்டேன் கேஸ் சிலிண்டரை திருச்சி குடோனில் இருந்து அரியலூர் டிலருக்கு லாரி மூலம் சிலிண்டரை ஏற்றி கொண்டு வந்துள்ளார்.

Advertisement

அப்போது அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி கிராமத்தில் திருப்பத்தில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் விழுந்து சிலிண்டர் வெடித்துள்ளது. இதையடுத்து அருகேயுள்ள வீட்டில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி வெளியில் கொண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் அருகில் செல்ல முடியாமல் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அருகில் செல்ல முடியாமல் திணறி வந்தனர்.

மேலும் இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரில் வந்து ஆய்வு செய்து வந்தனர். மேலும் இதனையடுத்து அரியலூரில் இருந்து திருச்சி, தஞ்சை செல்லும் போக்குவரத்துகளை மாற்றி அமைத்து பொதுமக்கள் சிரமம் அமையாமல் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது சிலிண்டர் ஓரளவு வெடிக்காமல் இருப்பதால் தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News