தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு காங்கிரஸ் எழுப்பியது பொதுவான சந்தேகம் : தேர்தல் ஆணையம் விளக்கம்

Advertisement

புதுடெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று முதல்வராக நயாப்சிங் சயானி பதவி ஏற்றார். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பியது. குறிப்பாக இவிஎம் எந்திரத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் பேட்டரி உள்ள தொகுதிகளில் பா.ஜவும், 60 முதல் 70 வரை பேட்டரி உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றதாகவும், இதே போல் 20 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் எந்திரங்களில் பேட்டரி 90 சதவீதத்திற்கும் மேல் இருந்ததாகவும், இது எப்படி சாத்தியம்.

இதனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக சந்தேகம் கொள்வதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது.

முழுத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தை போலவே பொதுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய அரசியல் கட்சியிடமிருந்து இதுபோன்ற ஒருசில குற்றச்சாட்டை ஆணையம் எதிர்கொள்கிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் குற்றம் சாட்டும் அணுகுமுறையை திருத்திக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை நேரத்தில் இதுபோன்ற அற்பமான, ஆதாரமற்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News