தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் இன்ஸ்பெக்டரிடம் தகராறு போதை ஏட்டு சஸ்பெண்ட்

வேலூர்: இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான பயிற்சி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் விஐடியில் முதற்கட்ட பயிற்சி ஏடிஎஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
Advertisement

இந்த பயிற்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். அப்போது காட்பாடி காவல்நிலைய தலைமை காவலர் கோபியிடம் புதிய சட்டங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் பாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு மதுபோதையில் இருந்த கோபி ஆபாசமாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனால் பயிற்சி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சக காவலர்கள், கோபியை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏட்டு கோபி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி மணிவண்ணன், பயிற்சி முகாமில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட ஏட்டு கோபியை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News