பெண் இன்ஸ்பெக்டரிடம் தகராறு போதை ஏட்டு சஸ்பெண்ட்
Advertisement
இந்த பயிற்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். அப்போது காட்பாடி காவல்நிலைய தலைமை காவலர் கோபியிடம் புதிய சட்டங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் பாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு மதுபோதையில் இருந்த கோபி ஆபாசமாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனால் பயிற்சி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சக காவலர்கள், கோபியை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏட்டு கோபி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி மணிவண்ணன், பயிற்சி முகாமில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட ஏட்டு கோபியை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Advertisement