இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு அர்ஜென்டினா அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றார்
Advertisement
இதைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் 2ம் நாளாக நேற்று பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு, கலாச்சாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இத்துடன் அர்ஜென்டினா பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, சுற்றுப்பயணத்தின் 4ம் கட்டமாக பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்றும் நாளையும் 2 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.
Advertisement