தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு அர்ஜென்டினா அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றார்

Advertisement

பியூனாஸ் அயர்ஸ்: பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலே இடையேயான பேச்சுவார்த்தையில், பல்வேறு முக்கிய துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி 8 நாட்களில் 5 நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டிரினிடாட் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 3ம் கட்டமாக அர்ஜென்டினாவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அர்ஜென்டினா தலைநகர் பியூனாஸ் அயர்ஸின் எஸீசா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் 2ம் நாளாக நேற்று பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு, கலாச்சாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இத்துடன் அர்ஜென்டினா பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, சுற்றுப்பயணத்தின் 4ம் கட்டமாக பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்றும் நாளையும் 2 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.

Advertisement