தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி

*கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
Advertisement

ஆற்காடு : ஆற்காடு- திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ஆற்காடு உட்கோட்டத்தைச் சேர்ந்த மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு-திண்டிவனம் சாலைஇரண்டு வழி சாலையாக உள்ளது.

இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி அகலப்படுத்த முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் 2024-25 ல் பணிகள் மேற்கொள்ள கடந்த ஜனவரி மாதம் 24 ம் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேற்கண்ட பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி நேற்று நேரில் சென்று சாலை பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கள ஆய்வு செய்தார். மேலும் இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, சாலை மேம்பாட்டு பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் செல்வகுமார், திருவண்ணாமலை நெடுஞ்சாலை தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சரவணன், ஆற்காடு உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் க.சரவணன், ராணிப்பேட்டை தரக்கட்டுப்பாடு உதவி கோட்டபொறியாளர் ஆர். பிரகாஷ் ஆற்காடு உட்கோட்ட உதவி பொறியாளர் வடிவேல் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Advertisement