தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆற்காடு அருகே பயங்கரம்; பாலியல் வன்கொடுமை செய்து மூதாட்டியை கொன்ற வாலிபர்

ஆற்காடு: ஆற்காடு அருகே மாந்தோப்பில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் முந்திரிகாடு பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி சுசிலா (80). தனது மாந்தோப்பில் உள்ள வீட்டில் மகன் சிவக்குமார் மற்றும் மருமகள் லோகலட்சுமியுடன் வசித்து வந்தார். சிவக்குமார் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்ததால், தனது மருமகளுடன் மாந்தோப்பில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுசீலா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது, ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடியை சேர்ந்த நந்தகுமார் (19) என்ற வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் அங்கு வந்துள்ளார். பின்னர், தோப்பில் உள்ள வீட்டில் இருந்த சுசிலாவிடம் ரகளையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சுசிலா அலறி கூச்சலிட்டப்படி தப்பியோடியுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது மூதாட்டியை நந்தகுமார் தரதரவென இழுத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில், மூதாட்டி சுசிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே நந்தகுமார் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருமகள் லோகலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.