தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடு நகராட்சியில் நடந்துவரும் ரூ.12.94 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள்

*நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

Advertisement

ஆற்காடு : ஆற்காட்டில் நடந்து வரும் ரூ.12.94 கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.9.46 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்துவருகிறது. மேலும் கடைகள் கட்டப்பட்டு தற்போது நுழைவாயில் கட்டும் பணி நடந்துவருகிறது.

இப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி அங்காடி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆற்காடு பாலாறு செய்யாறு பைபாஸ் சாலை முதியோர் இல்லம் அருகே 2 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேமிப்பு கிணறு அமைக்கும் பணி, தாஜ்புரா ஏரிக்கு ஆற்காடு வழியாக செல்லும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திமுக நகர செயலாளர் ஏ.வி.சரவணன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் நாராயணன், நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வேலவன், தாசில்தார் மகாலட்சுமி, பொறியாளர் பரமுராசு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News