தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடு அரசு ஆண்கள் பள்ளியில் 171 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

*எம்எல்ஏ வழங்கினார்

Advertisement

ஆற்காடு : ஆற்காடு ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அப்சர் பாஷா வரவேற்றார்.

நகர திமுக செயலாளர் ஏ.வி.சரவணன், நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பழனி, மாதிரி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு 171 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவிலான ஹாக்கி, வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்று திருச்சி தொட்டியத்தில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடிய வீரர்களுக்கு சான்றுகளை வழங்கினார்.

அப்போது எம்எல்ஏ பேசுகையில், `தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். முடிவில் முதுகலை ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Advertisement