தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடு அருகே 4 ஆண்டுகளுக்கு பிறகு நந்தியாலம் ஏரி நிரம்பி கோடி போனது

*உபரி நீரில் மீன்பிடித்த பொதுமக்கள்

Advertisement

ஆற்காடு : ஆற்காடு அருகே நந்தியாலம் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரி நீர் வெளியேறி கோடி போனது. ஏரியில் இருந்து வெளியேறிய மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3699 ஏரிகள் உள்ளன.

இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகள் உள்ளன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் 144 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது.

மேலும் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 35 ஏரிகளிலும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 51 ஏரிகளிலும், 26சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 121 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கு கீழ் 18 ஏரிகளிலும் நீர் உள்ளது. அதேபோல் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த தொடர் மழையால் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள நந்தியாலம் ஏரி நேற்று காலை முழு கொள்ளளவை எட்டி கோடி போனது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரில் விரால், ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் வெளியேறியது. அந்த மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பிடித்துச் சென்றனர்.

கடந்த 2021ல் பெய்த தொடர் கனமழை காரணமாக நந்தியாலம் ஏரி நிரம்பி கோடி போனது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது. இதனால் நந்தியாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பதாலும், குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்பதாலும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News