தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் பொறுப்பேற்பு!!

Advertisement

சென்னை: முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். தமிழகத்தில் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லகானி மாற்றப்பட்டு, 2018 பிப்ரவரி 22ம் தேதி சத்தியபிரதா சாகு, நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 15ம் தேதி பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 5 ஆண்டுகள் தொடர்ந்து மாநில தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் அவர் தமிழக தேர்தல் அதிகாரி என்ற பதவியுடன், கால்நடைத்துறை செயலாளராக கூடுதலாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தமிழக அரசுப் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல அவர் தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார். அவருக்குப்பதில், அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 1974ம் ஆண்டு பிறந்தார்.

2002ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்கு அனுப்பப்பட்டார். தற்போது பொதுத்துறைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். தேர்தல் ஆணைய அதிகாரியாக நியமிக்கப்படுகிறவர் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement