அரவக்குறிச்சி அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் பலி
07:35 PM Aug 16, 2025 IST
கரூர்: அரவக்குறிச்சி அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற புஷ்பா (55) அவரது பேத்தி தேவி (3) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த புஷ்பாவின் கணவர் மருதராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.