தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சி ஜி.என்.செட்டி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகத்தில் 3 தளம் போட்ட கட்டிடம், ஒரு பழைய ஓடு போட்ட கட்டிடம் என 4 கட்டிடங்கள் உள்ளது. இதில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய சீமை ஓடு போட்ட கட்டிடம் பழுதடைந்ததால் இந்த கட்டிடம் அகற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில், 3 கட்டிடங்களில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றும் போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதனால், பள்ளிக்குள் விஷப்பூச்சி மற்றும் பாம்புகள் வருகிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அச்சமடைந்துள்ளனர். மேலும், சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என 3 முறை பொன்னேரி எம்எல்ஏவிடம் மனு அளித்ததாகவும், ஆனால், அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆரணியாற்றங் கரையோரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் ஆரணியாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதனால், மாணவர்கள் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்தி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News