ஆரணியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டும்: 10 கிராம மக்கள் கோரிக்கை
Advertisement
மேலும் ஆற்றில் சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில் காவல் துறையினர் இந்த தரைப்பாலத்தில் யாரும் செல்லாதபடி தரைப்பாலத்திற்கு முன் முள் வேலிகளை அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக வாகனங்களில் 10 கிமீ சுற்றி செல்கின்றனர். ‘’தண்ணீர் வடிந்தவுடன் உடனடியாக உடைந்த தற்காலிக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்’’ என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement