தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டும்: 10 கிராம மக்கள் கோரிக்கை

Advertisement

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையே ₹20 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக 10 கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரவும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் வேலைக்கு செல்லவும் பாலம் அருகே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாத இறுதியில் பெஞ்சல் புயல் காரணமாக மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்ததன் காரணமாக பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் - காரணி கிராமங்களுக்கு செல்லும் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுவிட்டது.

மேலும் ஆற்றில் சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில் காவல் துறையினர் இந்த தரைப்பாலத்தில் யாரும் செல்லாதபடி தரைப்பாலத்திற்கு முன் முள் வேலிகளை அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக வாகனங்களில் 10 கிமீ சுற்றி செல்கின்றனர். ‘’தண்ணீர் வடிந்தவுடன் உடனடியாக உடைந்த தற்காலிக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்’’ என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News