தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் வனப்பகுதியில் குறுகலான சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் வாகனங்கள்

*முள்புதர்களை அகற்றி விரிவாக்கம் செய்ய கோரிக்கை

Advertisement

ஆரணி : ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் வனப்பகுதியில் குறுகலான சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் சிரமம்பட்டு வருகிறது. இதனால் முள்புதர்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர்-வேதாஜிபுரம் சாலை வெட்டியாந்தொழுவம் காப்புக்காட்டு வழியாக செல்கிறது.

இந்த சாலை ஆரணியில் இருந்து முள்ளண்டிரம், காவனூர், வேதாஜிபுரம், பூசிமலைக்குப்பம், 12.புத்தூர், கே.கே.தோப்பு, கிட்டங்குடிசை, கிருஷ்ணாவரம், எம்பி தாங்கல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலையில் தினமும் அரசு, தனியார் பஸ்கள், பள்ளி பஸ்கள், இருசக்கர வாகனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. பல ஆண்டுகளாக வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டின் வழியாக செல்லும் தார்சாலையின் இருபுறமும் முள்புதர்கள், செடிகள், மரங்கள் அதிகளவில் வளர்ந்து சாலையில் பரவியுள்ளது.

மேலும் இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் பகலில் கூட இந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எதிர் திசையில் வரும் வாகனங்களை கடந்து செல்லும்போது முள்செடிகளில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைகின்றனர்.

எனவே இந்த சாலையில் படர்ந்துள்ள முள்புதர்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் நெடுஞ்சாலைதுறையினர், செடி கொடிகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய முயன்றால், வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணிகள் தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, வெட்டியாந்தொழுவம் வனப்பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் சாலையின் இருபுறங்களில் வளர்ந்துள்ள முள்புதர்கள், மரங்கள் அகற்றி, சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News