தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அருகே இரண்டு தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயம்

திருவண்ணாமலை: ஆரணி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் 25 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளார். ஆரணி அருகே நெசல் கிராமத்தில் விகாஷ் வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலையில் பள்ளி வாகனம் காலம்பூரில் இருந்து சீனிவாசபுர வழியாக அந்த பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், சீனிவாசபுர கூட்ரோடு அருகே அதே பள்ளியில் சேர்ந்த விகாஷ் வித்யாஷ்ரம் பள்ளி வாகனமும் பின்னாடி வந்த வாகனமும் ஒன்று பின் ஒன்று மோதியது. இதனால் வாகனத்தில் இருந்த மாணவிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

முன் பேருந்தில் இருந்த 20 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். 25 மாணவர்களும் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் விபத்தை குறித்து தகவல் அறிந்து ஒருவர் ஒருவராக மருத்துவமனைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி கிராமத்து காவல் நிலைய, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் இரண்டு ஓட்டுனரையும் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இரண்டு பள்ளி பேருந்துகள் மோதியதால் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News