தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கன்று விடும் விழாவில் சீறிப்பாய்ந்த இளங்காளைகள்

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு 2ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350க்க்கும் மேற்பட்ட இளங்காளைகள் கொண்டு வரப்பட்டன.

Advertisement

தொடர்ந்து, ஓடும் பாதையில் மண் கொட்டப்பட்டு, இருபுறமும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கன்று விடும் விழா தொடங்கியது. ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் அவிழ்த்து விடப்பட்ட இளங்காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடின. இளைஞர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் இளங்காளைகளை விரட்டி சென்றனர்.

தொடர்ந்து, குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த இளங்காளைக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், 3வது பரிசு ரூ.20 ஆயிரம், 4வது பரிசு ரூ.15 ஆயிரம் என மொத்தம் 33 பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

விழாவில் காளைகள் முட்டி காயமடைந்தவர்களுக்கு ஆக்கூர் ஆரம்ப சுகாதார் நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த நபர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரணி தாலுகா போலீசார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஆரணி தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில்

ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

Related News