தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கோணம் அருகே தார் பிளாண்டில் மூலப்பொருட்களை மாற்றியபோது டேங்கர் லாரியில் பயங்கர தீ

அரக்கோணம்: அரக்கோணம் அருகே உள்ள தார் பிளாண்ட்டில், மூலப்பொருட்களை மாற்றிக்கொண்டிருந்தபோது டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலப்பாடி-பாளையார்கண்டிகை பகுதியில் தார்பிளாண்ட் உள்ளது. சென்னையில் இருந்து டேங்கர் லாரி மூலம் தார்கலவை செய்வதற்கான மூலப்பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது.

Advertisement

சுமார் 7.45 மணியளவில் ஊழியர்கள், டேங்கர் லாரியில் இருந்து தார்பிளாண்ட்டில் உள்ள தொட்டிக்கு மூலப்பொருட்கள் மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி ஓடினர். இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் டேங்கர் லாரி எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டேங்கர் லாரி எப்படி தீப்பிடித்தது என்பது குறித்தும், லாரி உரிமையாளர், தார்பிளாண்ட் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News